Erodu Siragugal

மரத்துடன் மனிதம் வளர்ப்போம்!
Service to Humankind is Service to God.

Tamilnadu government Green champion award + 1 lack

அரசின் விருது எங்களுக்கு பெரிய உத்வேகம் உருவாகியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் எங்கள் ஈரோடு சிறகுகள் முக்கிய சேவையில் ஒன்றான மரக்கன்றுகள் கடந்த 9 ஆண்டுகளாக நட்டு கொண்டு இருக்கிறோம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஏற்படுவதற்கும் அதற்கான விழிப்புணர்வு சேவையிலும், நீர் மாசு அடைவதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் மற்றும் பல அமைப்புகளுடன் இணைந்து தண்ணீருக்கான சேவைகளும் சுற்றுச்சூழல் காக மேம்பாட்டு செயல் திறமைக்காக எங்களது சேவையை பாராட்டி
தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது
மற்றும்
தமிழ்நாடு அரசு ஈரோடு் சிறகுகள் சேவையை பாராட்டி
ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி ஈரோடு மாவட்ட ஆட்சியர் உயர்திரு ஹெச். கிருஷ்ணனுன்னி அவர்களால் 6/6/2022 வழங்கினார்

மேலும் பல சேவைகளை செய்ய எங்களை ஊக்கப்படுத்தியது மிகவும் மகிழ்சி அளித்தது

5 வயது சிறுவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களும் நிறுவன உரிமையாளர்களும் மேற்பட்டோரின் 9 ஆண்டுகளின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்.

எங்கள் ஈரோடு சிறகுகளை தேர்வு செய்த தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்திற்கும்

ஈரோடு மாவட்ட ஆட்சியர்
திரு ஹெச்.கிருஷ்ணனுன்னி
அவர்களுக்கும் ஈரோடு சிறகுகள் அனைவரின் சார்பாக மகிழ்சியையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்விருது பெற முக்கிய காரணமாக இருக்கும் ஈரோடு சிறகுகள் சேவை பணி நண்பர்களும், தொடர் சேவைகள் செய்ய பொருள் உதவியும் நிதி உதவியும் உடனிருந்து எங்களை எப்பொழுதும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்திக் கொண்டே கனிவான சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கும் தான் இந்த விருது இவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

ஈரோடு சிறகுகள் தலைவர்
விமல் கருப்பண்ணன்
9786669999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *